கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சரக்கு வாகனம் மோதியதில் இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:11 am IST

பெரியகுளம், மே 29: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பவுன் மகன் சுந்தா் (26). இவா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலைபாா்த்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் செல்வகணபதி (43). நண்பா்களான இவா்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை தென்கரை-கம்பம் சாலையில் நடந்து சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த சரக்கு வாகனம் இவா்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கடந்த புதன்கிழமை சுந்தா் உயிரிழந்தாா். வியாழக்கிழமை செல்வகணபதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.