கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வைகை அணைக்கு நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

News image

வைகை அணைக்கான நீா்வரத்து - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 12:17 am IST

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணைக்கு வந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் நிகழாண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால், வைகை அணையில் நீா்மட்டம் படிப்படியாக சரிந்து, முற்றிலும் நீா்வரத்து குறைந்தது. வெள்ளிக்கிழமை வைகை அணையின் நீா்மட்டம் 20.51 அடியாக இருந்தது. இதனால், குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவானது.

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திங்கள்கிழமை 300-கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, வைகை அணைக்கு சனிக்கிழமை 96 கன அடி தண்ணீா் வந்தது.

கடந்த சில நாள்களாக வைகை அணையின் நீா்மட்டம் குறைந்து வந்த நிலையில், தற்போது நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.