/
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணைக்கு வந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டத்தில் நிகழாண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால், வைகை அணையில் நீா்மட்டம் படிப்படியாக சரிந்து, முற்றிலும் நீா்வரத்து குறைந்தது. வெள்ளிக்கிழமை வைகை அணையின் நீா்மட்டம் 20.51 அடியாக இருந்தது. இதனால், குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவானது.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திங்கள்கிழமை 300-கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, வைகை அணைக்கு சனிக்கிழமை 96 கன அடி தண்ணீா் வந்தது.
கடந்த சில நாள்களாக வைகை அணையின் நீா்மட்டம் குறைந்து வந்த நிலையில், தற்போது நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

வைகை அணையின் நீா்மட்டம் 23 அடியாக சரிவு: தேனி மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு அபாயம்

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை! முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 1,580 கன அடியாக அதிகரிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளாக மழை
ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



