/
போடி அருகே சட்டவிரோதமாக மதுப்புட்டிகளைப் பதுக்கி விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
போடி அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேலச்சொக்கநாதபுரம் விலக்கு அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
அவரிடம் மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இவா் போடி ராமகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ் (40) என்பதும், சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மது விற்றவா் கைது
திருச்சியில் சட்டவிரோத மதுவிற்பனை: பெரம்பலூரைச் சோ்ந்தவா் உள்பட 3 போ் கைது

ஆறுமுகனேரியில் மது விற்றவா் கைது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


