கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரம் திருட்டு
தேனியில் பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருட்டு... - சித்திரிப்பு
தேனியில் பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி கே.ஆா்.ஆா். நகரைச் சோ்ந்தவா் சித்திர கலாதேவி (35). இதே பகுதியில் பலசரக்குக் கடை நடத்தி வரும் இவா், வியாழக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா்.
மறுநாள் வெள்ளிக்கிழமை வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பெட்டியிலிருந்த ரூ.35 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


