இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,சீனா, பிரேசில், பிரான்ஸ் உள்ளிட்ட 28 நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.இந்த கருத்தரங்கில் கட்டுரை சமர்ப்பிக்க கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக எம்.பி.ஏ. துறை பேராசிரியை யவனாராணிக்கு அழைப்பு வந்தது.இதன் பேரில் அவர் கருத்தரங்கில் கலந்து கொண்டு, கிராமங்களில் சுற்றுலா வளர்ச்சியில் பொருளாதார மேன்மை என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்து, அதில் தமிழ்நாடு கிராமப்புற சுற்றுலா துறை வளர்ச்சிகள் குறித்து உரையாற்றினார்.