திருச்சுழி அருகே நாலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மனித உரிமைகள் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. குழுத் தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். திருச்சுழி தாசில்தார் செல்லமணி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பூமிநாதன் வரவேற்றார். அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., நம்பிராஜன், சிறப்புரையாற்றினார். வழக்குரைஞர்கள் செல்வராஜ், கந்தசாமி, முத்துகிருஷ்ணன், ரத்தினரெங்கசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் சொத்து உரிமை, முதியோர் உதவி தொகை, விபத்து நஷ்டஈடு பெறுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர். பொதுமக்களிடமிருந்து சட்டம் சார்ந்த, சட்டம் சாராத மனுக்கள் பெறப்பட்டன. நிர்வாக உதவியாளர் குணசேகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். வழக்குரைஞர் பாலமுருகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.