மல்லாங்கிணறில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

 விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடத் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

 விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடத் திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  ரூ.5 லட்சம் செலவில் நேதாஜி நகரில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்புவிழா பேரூராட்சி தலைவர் நாகையா தலைமையில் நடைபெற்றது.  துணைத் தலைவர் மணிராஜ் முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு புதிய அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தார்.   சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம். போஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com