அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நகரத் தலைவர் நாகூர் மீரான் தலைமையில் நடைபெற்றது. மாணவர் அணிச் செயலாளர் அலி அல்குதயா வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் நைனா முகமது, வாழவந்தாபுரம் ஜமாத் தலைவர் ஜின்னா, அல்-அமீன் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ஹிதாயத்துல்லா, வாழவந்தாபுரம் ஜமாத் செயலாளர் கபருல்லா கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சர்வத்கான் 60 மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரத்து 800 மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கினார். வட்டச் செயலாளர் அகமது எகியா தப்ரேஷ் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.