விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மேலாண்மை மற்றும் தலைமை பண்பு வளர்த்தல் பயிற்சி நடந்தது.
இதில், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள், புள்ளி விபரங்களின் முக்கியத்துவம், பொறுப்புகள், மாவட்ட கல்வி தகவல் படிவம், குழு பகுப்பாய்வு, கிராம கல்வி குழு, பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றி விளக்கப்பட்டன.
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுடலைமணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, பயிற்சி நிறுவன முதல்வர் ஆலோசனைகளை வழங்கினர். பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மகாலட்சுமி, வெம்பக்கோட்டை மைய மேற்பார்வையாளர் விஜயகுமார், ஆசிரிய பயிற்றுனர் செந்தில்குமார், திருச்சுழி கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கருப்பையா பயிற்சி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.