அனுமன் சேனா கூட்டம்

 அருப்புக்கோட்டை, வெள்ளகோட்டை சாலியர் நடுநிலைப் பள்ளியில், அகில பாரத அனுமன் சேனாவின் கிளைக் கூட்டம் நடந்தது.
Updated on
1 min read

 அருப்புக்கோட்டை, வெள்ளகோட்டை சாலியர் நடுநிலைப் பள்ளியில், அகில பாரத அனுமன் சேனாவின் கிளைக் கூட்டம் நடந்தது.

   நகர அமைப்பாளர் கந்தசாமி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சங்கர் சிறப்புரையாற்றினார். நகர இணை அமைப்பாளர் கண்ணன், பொதுச்செயலர் சந்திரசேகர், செயலாளர்கள் செல்வராஜ், சிவனேசன், சக்திவேல், பொருளாளர் பாலசுந்தரம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

   சரக்கு வாகனங்களான லாரி, மினி லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்ல தடை விதிக்கவும், சிவராத்திரி சமயம் அருப்புக்கோட்டையிலிருந்து புத்தூருக்கு விழாக்கால அரசு பஸ்கள் இயக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com