திருச்சுழி ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாயக் கல்வி சட்டம்-2009 பற்றிய வீதி நாடகங்கள் ம.ரெட்டியபட்டி, ஒத்தக்கடை, பரளச்சி, கல்லூரணி, சித்தலக்குண்டு மற்றும் திருச்சுழி ஆகிய ஊர்களில் நடத்தப்பட்டன.
6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் கட்டாயமாக கல்வி பெறவேண்டும் என்பதற்காக இலவச கட்டாயக் கல்வி சட்டம்-2009இன் சாராம்சங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பொருட்டு வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியை உதவி தொடக்க கல்வி அலுவலர் கருப்பசாமி பார்வையிட்டார். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுடலைமணி, உதவி திட்ட அலுவலர் மாடசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரேணுகாதேவி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.