திருச்சுழி தாலுகா, நாலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மனித உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சார்பு நீதிபதி தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கிப் பேசினார். திருச்சுழி வட்டாட்சியர் செல்லமணி முன்னிலை வகித்தார். நாலூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமிநாதன் வரவேற்றார்.
முகாமில் வழக்குரைஞர்கள் செல்வராஜ், கந்தசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு நம்பிராஜன் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு குறித்துப் பேசினார்.
இதில் வழக்குரைஞர்கள் ரத்தினரெங்கசாமி, பன்னீர்செல்வன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வட்ட சட்டப் பணிக்குழு நிர்வாக உதவியாளர் குணசேகரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.