விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவில் காரியாபட்டி ஒன்றிய அதிமுக செயலர் கரியனேந்தல் ராமமூர்த்தி அதிமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மல்லாங்கிணர், அயன்ரெட்டியபட்டி விலக்கு, நந்திக்குண்டு, பெரியபுளியம்பட்டி, கல்குறிச்சி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கொடியேற்றும் விழா நடைபெற்றது.
பேரூராட்சி துணைத் தலைவர் மணிராஜ், கிளைச் செயலர்கள் வீரு, ராஜாராம், கருப்புராஜா ஆகியோர் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தனர்.
அதிமுக நிர்வாகிகள் துரைப்பாண்டி, ஜான் பாக்கியராஜ், தங்கராசு, பஞ்சவர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.