விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
மல்லாங்கிணர் மெயின் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து மெயின் பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் மல்லாங்கிணர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
காரியாபட்டி வட்டாட்சியர் முகம்மதுரபிக்கான், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், நிலஅளவையாளர் செபஸ்தியான் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மல்லாங்கிணர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் ஆர்தர்ஜஸ்டின், கருப்பசாமி தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

