திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

சிறுதானிய மேம்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் தீவிர சிறுதானிய மேம்பாடு மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கான  பயிற்சி முகாம் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

Updated On :17 மார்ச் 2013, 7:21 pm

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் தீவிர சிறுதானிய மேம்பாடு மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கான  பயிற்சி முகாம் கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.

      இப்பயிற்சியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் சிறு, குறு தானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்களும், சிறுதானியங்களின் உயர் விளைச்சல் ரகங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட பொருள்களையும் அவற்றின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் பற்றியும் விரிவாக கூறப்பட்டது.   சிறுதானியங்கள் அடங்கிய கண்காட்சியும் முகாமில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இப்பயிற்சியுடன் விவசாயிகள் பட்டறிவு பயணமாக பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களுக்கு  அழைத்துச் செல்லப்பட்டு சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் மதிப்பூட்டல் பற்றி  வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ராஜாராம், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி மற்றும் இதர உதவிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.