விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ளது டி.கடம்பங்குளம். இந்த கிராமத்தில் கடந்த 2 வாரகாலமாக மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கை,கால் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். பெரியவர்களுக்கு கை, கால் வீங்கி காணப்படுகிறது.
20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இந்த மர்ம காய்ச்சல் பாதிப்பால் தேர்வு எழுத இயலவில்லை. 100-க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் குறையாததால் மக்கள் அச்ச உணர்வில் உள்ளனர். மருத்துவ குழுவினர் அக்கிராமத்தில் முகாமிட்டு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.