முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

காட்டுப் பகுதியில் கருந்திரி தயாரித்த இருவர் கைது

காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கருந்திரி தயாரித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :13 மே 2013, 12:15 am IST

காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக கருந்திரி தயாரித்த இரண்டு பேர் கைது

செய்யப்பட்டனர்.

   கோட்டைப்பட்டி, துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம் கிராமங்களில் சட்டவிரோதமாக  காட்டுப்பகுதியில் கருந்திரி தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட கிராமங்களில் காவல் துறையினர் ரோந்து சென்றனர்.

   மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் காட்டுப் பகுதியில் செட் அமைத்து பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீஸார் கருந்திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பசாமி (40), பாக்கியராஜ் (40) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அங்கு தயாரித்து வைத்திருந்த 100 கருந்திரி கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.