தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியைகள் பற்றாக்குறை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியைகள் பற்றாக்குறையால், மாணவிகள் சிரமப்படுகின்றனர்.   காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1100-க்கும்

Updated On :25 அக்டோபர் 2013, 6:49 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியைகள் பற்றாக்குறையால், மாணவிகள் சிரமப்படுகின்றனர்.   காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பிளஸ்-2-ல் மட்டும் 550 பேர் படித்து வருகின்றனர். முதுகலை தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு, 3 ஆசிரியைகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு ஆசிரியை பாடம் நடத்தி வருகிறார்.

    முதுகலை விலங்கியியல், வேதியியல், வணிகவியல், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த பாடப்பிரவுகளுக்கு, இருக்கிற ஆசிரியைகளை கொண்டு பாடம் நடத்தி வருகின்றனர். ஆசிரியைகளுக்கு பணிச்சுமை அதிகரிப்பதால், முறையாக பாடம் நடத்த முடிய வில்லை.     பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கூறியதாவது: காலிப் பணியிடங்களை நிரப்ப, பலமுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை நிரப்பப்படவில்லை. ஆசிரியைகள் பற்றாக்குறையால், மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். உடனடியாக ஆசிரியைகளை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.