திருச்சுழியில் இளைஞர் பெருமன்ற மாநாடு

  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய மாநாடு திருச்சுழியில் நடைபெற்றது. ஜீவானந்தம் தலைமை வகித்தார். கணேஷ்குமார், அழகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில்குமார்
Updated on
1 min read

  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய மாநாடு திருச்சுழியில் நடைபெற்றது. ஜீவானந்தம் தலைமை வகித்தார். கணேஷ்குமார், அழகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில்குமார் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, நரிக்குடி ஒன்றியச் செயலாளர் பெரியண்ணன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், தாலுகா செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் இளங்கோ உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில், திருச்சுழி குண்டாறு பகுதியில் அணைகட்டி, பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும். திருச்சுழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். எம்.ரெட்டியபட்டி - கிருஷ்ணாபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com