நரிக்குடி பகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
நரிக்குடி அருகே உளுத்திமடையிலிருந்து, 6 கி.மீ. தொலைவில் உள்ள செங்கமடை, உளுத்திமடை, பட்டனேந்தல், வாகைக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் நரிக்குடி ஒன்றியத்தில் இருந்தாலும், இப்பகுதி மக்கள் தங்களின் தேவைக்கு, அருகிலுள்ள திருப்புவனம் மற்றும் மதுரைக்கு செல்வர். கல்லூரி மாணவர்களும், திருப்புவனம், மதுரைக்கு செல்கின்றனர். இவர்களின் தேவைக்காக, மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து உளுத்திமடை வரை வந்து செல்ல, அரசு பஸ் உள்ளது. உளுத்திமடையிலிருந்து உச்சனேந்தல் வரையிலான, 6 கி.மீ. தூரமுள்ள சாலை முழுவதுமே மோசமாக இருப்பதால், இந்த பஸ், பழையனூர் வரை மட்டுமே வந்து செல்கிறது. இதனால், தினமும் கூலி உள்ளிட்ட வேலைக்கு செல்லும், நூறுக்கும் மேற்பட்டோர் மற்றும் மாணவர்கள், 5 கி.மீ. தூரம் பழையனூர் நடந்து சென்று, பஸ் ஏறிச் செல்கின்றனர். பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு சாலையை சீரமைத்து உளுத்திமடை வரை பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

