விருதுநகர் மாவட்டம் தோப்பூரில் பி.ஏ.சி.எல். லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்கள் உள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லகிரி என்பவர் இதனை நிர்வகித்து வருகிறார். தோப்பூரைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் பவர் ஏஜென்ட்டாக செயல்பட்டு வருகிறரார். இவர் மதுரை பாலன் என்பவருக்கு அதில் உள்ள சில சொத்துக்களை விற்றுள்ளார்.
பாலன் அந்த சொத்துக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்தபோது, லகிரி தகராறு செய்தார். இதனால் ஏற்பட்ட மோதலில் அங்குள்ள பொருள் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து காரியாபட்டி போலீஸில் லகிரி புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.