நாய் கடித்து 10 பேர் காயம்

திருச்சுழி அருகே வெறிநாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Updated on
1 min read

திருச்சுழி அருகே வெறிநாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சுழி அருகேயுள்ள சவ்வாஸ்புரம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடித்ததில் தினேஷ், வாசுதேவன், கோப்பம்மாள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கல்லூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமத்தில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com