: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் சனிக்கிழமை திமுக சார்பில் பாட்டு மன்றம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.
மல்லாங்கிணறில் நகர திமுக சார்பில் திண்டுக்கல் ஐ.லியோனியின் பாட்டு மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 13-வது வார்டு செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் நாகையா, நகர செயலாளர்கள் முருகேசன், செந்தில், ஒன்றியச் செயலாளர்கள் சண்முகச்சாமி, போஸ், பொன்னுச்சாமி, முன்னாள் துணைத் தலைவர் போஸ் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆகியோர் பாட்டுமன்றத்தை துவக்கி வைத்துப் பேசினர்.
பாட்டு மன்றத்துக்கான ஏற்பாடுகளை மல்லாங்கிணர் நகர திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.