விருதுநகர் மாவட்டம் புலியூரானில் மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் நிதி உதவியுடன், சீட்ஸ் நிறுவனம், அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியது. உதயம் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா பெண் தொழிலாளர் நல சங்கத் தலைவி செல்வி தலைமை வகித்தார். வக்கீல் விஜயரங்கன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், அவற்றுக்கான சட்டங்கள் மற்றும் உரிமைகள், அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார். நிகழ்ச்சிகளை, சீட்ஸ் நிறுவன திட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி, கலாவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.