திருச்சுழி ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கியும், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுக்கூட்டம் நடந்தது. திருச்சுழி தொகுதிச் செயலர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் மோகன், சென்னிலைகுடி ஊராட்சி மன்றத் தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார். தலைமைக் கழக பேச்சாளர் மோகன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் குருசாமி, கவுன்சிலர்கள் மகாமூர்த்தி, சொக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியக் கவுன்சிலர் கமலபாஸ்கரன் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை திருச்சுழி ஒன்றியச் செயலர் முத்துராமலிங்கம் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.