வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பேச்சியம்மன் கோயில் மாசிக்களரி திருவிழா

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கீலதுலுக்கன்குளம் பேச்சியம்மன் கோயிலில் மாசிக்களரி திருவிழா 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.

Updated On :5 மார்ச் 2014, 6:48 pm

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கீலதுலுக்கன்குளம் பேச்சியம்மன் கோயிலில் மாசிக்களரி திருவிழா 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.

 100-க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். புதன்கிழமை பல்வேறு அபிஷேகத்துடன், அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு தீச்சட்டி எடுத்து வழிபட்டனர்.

 வில்லிபத்திரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.டி.பாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை பேச்சியம்மன் திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.