காரியாபட்டி பகுதியில் வீட்டுக்கு ஒரு பொறியாளரை உருவாக்குவேன் என்று ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முகம்மது ஜலீல் கூறினார்.
காரியாபட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம்தென்னரசு வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர்கள் வேங்கடபதி, ரகுபதி, தங்கவேலன் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினர். கூட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முகம்மது ஜலீல் பேசியதாவது:
மதுரையிலிருந்து காரியாபட்டி வழியாக தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையை எட்டு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். மதுரையிலிருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில்பாதை அமைத்து ரயில் போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுப்பேன். பல ஆண்டுகளுக்கு முன்பே காரியாபட்டி பகுதியில் கல்லூரிகளை ஏற்படுத்தியுள்ளேன். இப்பகுதியில் வீட்டிற்கு ஒரு பொறியாளரை உருவாக்குவேன். இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மருத்துவக் கல்லூரி அமைக்க பாடுபடுவேன் என்றார்.
கூட்டத்துக்கான ஏற்பாடுகளை காரியாபட்டி ஒன்றிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

