காரியாபட்டி பகுதியில்தக்காளி விலை கடும் வீழ்ச்சி

காரியபட்டி பகுதியில் தக்காளி கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.காரியாபட்டி பகுதியில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மிளகாய் விதைகள் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் ஊடுபயிராக தக்காளி செடிகளை விவசாயிகள் நடவு செய்தனர்
Updated on
1 min read

காரியபட்டி பகுதியில் தக்காளி கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

காரியாபட்டி பகுதியில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மிளகாய் விதைகள் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் ஊடுபயிராக தக்காளி செடிகளை விவசாயிகள் நடவு செய்தனர்

. தற்போது அதில் பழுத்துள்ள தக்காளி பழங்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் விளைச்சல் குறைவாக இருந்ததால், தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. இந்த ஆண்டு ஒவ்வொரு செடியிலும் குறைந்தபட்சம் 3 முதல் 6 கிலோ வரை தக்காளி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை மார்க்கெட்டுகளில் இருந்தும் காரியாபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு தக்காளி வரத்து அதிக அளவில் வருவதாலும், விலை வீழ்ச்சியடைந்து கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை விற்பனையாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com