விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகேயுள்ள கெப்பிலிங்கம்பட்டியில் புதிய ரேஷன் கடை திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.6.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் முத்துபாண்டி தலைமையில் நடைபெற்றது.
காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மல்லாங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.