வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள பிசிண்டி கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் மருதுபாண்டி (24).
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள பிசிண்டி கிராமத்தைச் சேர்ந்த போஸ் மகன் மருதுபாண்டி (24).

இவர் தனது அக்காள் மகள் தமிழ்பிரியாவை (23) குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இவர்கள் பிசிண்டியில் வசித்து வந்தனர். இந்நிலையில் தனது சகோதரிக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்காக தனது மனைவியுடன் பெற்றோர் வீட்டுக்கு மருதுபாண்டி சென்றபோது மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.

இதனால் மனமுடைந்த தமிழ்பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரில் வசித்து வருபவர் முத்துவேல். இவரது மனைவி வாசுகி (26).

இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இதனால் மனமுடைந்த வாசுகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com