பரளச்சியில் மக்கள் தொடர்பு முகாம்

திருச்சுழி அருகே பரளச்சியில் மக்கள் தொடர்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

திருச்சுழி அருகே பரளச்சியில் மக்கள் தொடர்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு வட்டாட்சியர் ரங்கசாமி தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர்கள் ராமச்சந்திரன், சாந்தி முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் போத்திராஜ் கலந்துகொண்டனர். இதில், ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் நலிந்த கலைஞர் உதவி, திருமண நிதிஉதவி, இயற்கை மரண நிதிஉதவி, நலிந்தோர் நிதிஉதவி மற்றும் பட்டா மாறுதல், வருமானம், இருப்பிட சான்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 105 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. பின்னர் வட்டாட்சியர் ரங்கசாமி கல்லூரணி எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளியில் 108 மரக்கன்றுகளை நட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com