மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 7:38 pm

DIN

உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
      இது குறித்து அவர் வியாழக்கிழமை மேலும் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இருதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரக பாதை, தண்டுவடம், மூளை நரம்பியல், இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் புற்று நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
     எனவே, மனுதாரர்கள் ஆட்சியருக்கு விண்ணப்பிக்கும்போது அசல் மனு இணைக்க வேண்டும். அரசு அங்கீகரித்த தனியார் மருத்துவமனையிலிருந்து நோயாளியின் முகவரி, அறுவைச் சிகிச்சைக்கான பெயர், மருத்துவரின் கையெழுத்து பெற்ற சான்றிதழை இணைக்க வேண்டும்.
    குடும்பத் தலைவரின் பெயரில் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் உள்ள வருமானச் சான்று இணைக்க வேண்டும். குடும்ப அட்டை, புகைப்படம் மற்றும் அனைத்து சான்றுகளும் ஓராண்டுக்குள் பெற்றதாக இருக்க வேண்டும். மேலும், வேறு எந்தத் திட்டத்திலும் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி பெறப்படவில்லை என சான்றளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.