முன்னாள் சபாநாயகர் காளிமுத்து நினைவு தினம் அனுசரிப்பு

சாத்தூர் அருகே முன்னாள் சபாநயகர் காளிமுத்துவின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Updated on
1 min read

சாத்தூர் அருகே முன்னாள் சபாநயகர் காளிமுத்துவின் 11ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
   விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ராமுத்தேவன்பட்டியில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் நினைவிடம் உள்ளது. இங்கு அதிமுக அம்மா அணியின் சார்பில் அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், அம்மா அணியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் எதிர்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன், டேவிட் அண்ணாதுரை ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக காளிமுத்துவின் உறவினர்கள் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நினைவிடம் அருகே நடைபெற்ற அன்னதானத்தை தங்கதமிழ்செல்வன்,எதிர்கோட்டை சுப்பிரமணியன்  ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் அதிமுக தொண்டர்களும், கிராமப் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு காளிமுத்துவின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   இந்நிகழ்வின் போது மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதாதனசேகரன், மாவட்ட கழக பொருளாளர் இளங்கோவன்,மாவட்ட மாணவரனி செயலாளர் எஸ்.டி.முனீஸ்வரன்,நகர செயலாளர் முருகன்,தினகரன் பேரவை மாநிலசெயலாளர் சாந்திஆனந்த் உள்ளிட்ட ஏராளமோனர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com