சிவகாசியில் சேதமடைந்துள்ள மழைநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் - விருதுநகர் புறவழிச்சாலையில் இரு புறமும் உள்ள மழைநீர் செல்லும் வாய்க்கால் பல இடங்களில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக புறவழிச்சாலையிலிருந்து, லிங்கபுரம் காலனிக்கு செல்லும் சாலைக்கு சில மீட்டர் தூரத்தில் மழைநீர் செல்லும் வாய்க்கால் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அப்பகுதியில் தனியார் ஒருவர், அவரது கட்டடத்துக்கு செல்லும் வழியில் உள்ள மழைநீர் வாய்க்காலை
சேதப்படுத்தியுள்ளார்.
அப்பகுதியில் கடை வைத்திருப்பவர்கள், மழைநீர் வாய்க்கால் இருப்பதை கண்டு கொள்ளாமல் மூடிவிட்டனர். லிங்கபுரம் காலனிக்கு செல்லும் சாலையில் வாய்க்கால் முற்றிலும் காணாமல் போய்விட்டது. இதனால், மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் வழிந்தோடுவதால் சாலையும் பழுதடைகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகம், விருதுநகர் புறவழிச் சாலையில் உள்ள மழைநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






