சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
சிவகாசி அருகே உள்ள எதிர்கோட்டையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில், கணபதி, தெய்வானை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில், சுப்பிரமணி, மாரிமுத்து ஆகிய இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கண்ணார்பட்டியைச் சேர்ந்த இருளப்பன் மகன் பரமசிவம் (19) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதன்மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த விஜயலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போதைப்பொருள் பயங்கரவாதத்தை சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை: தில்லி துணைநிலை ஆளுநா் கருத்து

”பழனிசாமியின் ஓனர் பாஜகதான்!” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

ஒப்பந்தமா? தாக்குதலா? 24 மணிநேரத்தில் தெரியவரும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!

”திமுக தொடர்ந்து 2 முறை வென்றதில்லையாம்! உடைத்துக் காட்டுகிறேன்!” MK Stalin
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

