சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் சாவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:17 am

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
 சிவகாசி அருகே உள்ள எதிர்கோட்டையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில், கணபதி, தெய்வானை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில், சுப்பிரமணி, மாரிமுத்து ஆகிய இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர். 
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கண்ணார்பட்டியைச் சேர்ந்த இருளப்பன் மகன் பரமசிவம் (19) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
இதன்மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த விஜயலட்சுமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.