சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது

சிவகாசியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

சிவகாசியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருத்தங்கல் ரயில்நிலையம் அருகே போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும்  வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாராம். போலீஸார் அவரது பையை வாங்கி சோதனையிட்ட போது, அதில் மதுபாட்டில்கள் இருந்ததாம். விசாரணையில் அவர் எம்.புதுப்பட்டி ராஜேஸ்(29) என தெரியவந்தது. இது குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்த 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல மாரனேரி காமராஜர் காலனியில் போலீஸார் ரோந்துப் பணியின் போது, கையில் பையுடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரிடம் போலீஸார் சோதனையிட்ட போது, அவரது பையில் மதுபாட்டில்கள் இருந்ததாம். விசாரணையில் அவர் விளாம்பட்டி வீரபுத்திரன்(61) என தெரியவந்தது. மாரனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந் 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.