நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

அனுப்பன்குளத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் அனுப்பன்குளம் ஊராட்சியில் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சிவகாசி ஊராட்சி ஒன்றியம் அனுப்பன்குளம் ஊராட்சியில் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். இதில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, 46 பயளாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட ரூ.6.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  வழங்கிப்பேசியதாவது: பட்டாசு ஆலை பிரச்னை பற்றி இப்பகுதி மக்கள் என்னிடம் கூறினார்கள். பட்டாசு ஆலை உரிமையாளர்களை கடந்த திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்திக்க வைத்தேன். அவர்கள் முதல்வரிடம் பிரச்னைகளை கூறியுள்ளார்கள். தொழிலாளர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. நிச்சயம் இந்த பிரச்னைக்கு நல்ல முடிவு வரும். பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு  உறுதுணையாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.