ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

அருப்புக்கோட்டை கல்லூரியில் எய்ட்ஸ் காசநோய் பரிசோதனை முகாம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் எய்ட்ஸ் மற்றும் காசநோய் பரிசோதனை

Updated On :25 டிசம்பர் 2018, 6:37 am IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் எய்ட்ஸ் மற்றும் காசநோய் பரிசோதனை முகாம் அக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை  நடைபெற்றது.
திருச்சுழியிலுள்ள ஐசிடிசி மையமும் இக் கல்லூரியும் இணைந்து நடத்திய முகாமிற்குக் கல்லூரி முதல்வர் எஸ்.பாண்டியராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் இசக்கித்துரை முன்னிலை வகித்தார். முகாமில் பேசிய முதல்வர் பாண்டியராஜன், ஆரோக்கியமே செல்வம் என்பது பற்றியும், நோய் வரும் முன் காப்போம் என்பது பற்றியும் மாணவர்களிடையே விளக்கினார். இதில், ஐசிடிசி மைய ஆலோசகர் விஜயலட்சுமி எய்ட்ஸ் மற்றும் காசநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து 100-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் தாமாக முன்வந்து எய்ட்ஸ் மற்றும் காசநோய் குறித்த மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்க  திட்ட அலுவலர் முனைவர் சி.செல்லப்பாண்டியன், செஞ்சுருள் சங்கத்  திட்ட அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் செய்திருந்தனர். நிர்வாகி எஸ்.குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.