முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது! ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

ராஜபாளையம் பள்ளியில் பேரிடர் மீட்பு  பயிற்சி

ராஜபாளையம் அருகே முறம்பில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

Updated On :25 டிசம்பர் 2018, 6:39 am IST

ராஜபாளையம் அருகே முறம்பில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த செயல் விளக்க பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரிடர் குறித்த விளக்கத்திற்கு பின்னர், ஆபத்தில் சிக்கியவர்ளை மீட்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆபத்தில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்பது, முதலுதவி, மீட்கப் பட்டவர்களை பத்திரமாக தரையிறக்கி மருத்துவ முகாம்களுக்கு கொண்டு செல்வது குறித்தும் பயிற்சி அளிக்கப் பட்டது. 
மேலும் தீ பற்றுவதற்குரிய காரணங்கள் குறித்தும், தீ எரிவதற்கு தேவையான விஷயங்கள் குறித்தும் விளக்கம் அளித்த பின்னர், பல்வேறு வழிகளில் தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப் பட்டது.
இந்த பயிற்சி முகாமில் 100 -க்கும் மேற்பட்ட  மாணவர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.