தற்கால சூழ்நிலையில் அனைவருக்கும் உயர் கல்வி அவசியம் என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வியாழக்கிழமை 14 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தாளாளர் ஏ.பி. செல்வராஜன் தலைமை வகித்தார். இதில், மொத்தம் 849 மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி வேலுமணி பேசியதாவது:
கல்வி ஒன்றே விலை மதிக்க முடியாத சொத்தாகும். கல்வி கற்றவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு. தற்போது இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் உயர் கல்வி கற்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். மேலும், அனைத்துத் துறையிலும் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதை தெரிந்துகொள்ள உயர் கல்வி அவசியம்.
ஆறு முதல் பதினாறு வயது வரை குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்கவேண்டும். அது அவர்களது அடிப்படை
உரிமை. இலக்கை நிர்ணயித்து முன்னேறினால் வெற்றி பெறலாம் என்றார்.
முன்னதாக, முதல்வர் சீ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். துணை முதல்வர் பெ.கி. பாலமுருகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

