மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தனியார் குடிநீர் வாகனங்களை ஆய்வு செய்யக் கோரிக்கை

சாத்தூரில் தனியார் குடிநீர் வாகனங்களைச் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்யப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :21 மே 2018, 6:58 pm

சாத்தூரில் தனியார் குடிநீர் வாகனங்களைச் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்யப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் நகர் பகுதியிலிருந்தும், கிராம பகுதியிலிருந்தும் கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து குடிநீர் தொட்டியில் சேமித்து, குடம் 12 ரூபாய் என சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படும் வாகனங்களும், அவற்றை எடுத்து வரும் குடிநீர்த் தொட்டிகளும் சுகாதாரமற்ற முறையிலும், சுத்தம் செய்யப்படாமலும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் எனவே குடிநீர் வாகனங்கள் மற்றும் தொட்டிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.