
ஓய்வு பெற்ற தமிழாசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஸ்ரீவில்லிபுத்தூர், கிரீன் சிட்டி சுழற் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் செ.பாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், கிரீன் சிட்டி சுழற் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் புலவர் செ.பாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இதற்கு சுழற் சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். கல்லூயின் செயலாளர் ஆர்.ஏ.திலீபன்ராஜா முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தமிழாசிரியரும், தற்போது இக் கல்லூரியில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வரும் புலவர் செ.பாலகிருஷ்ணனின் 55 ஆண்டு கல்வி, சமூக மற்றும் ஆன்மிக சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது சுழற் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
மேலும் கல்லூரியின் முதல்வர் பி.மல்லப்பராஜின் கல்வி சேவை, ஆளுமைத் திறன் மற்றும் தலைமைப் பண்பினைப் பாராட்டி சிறந்த கல்வியாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை தொகுதியின் எம்.எல்.ஏ. மு.சந்திரபிரபா முத்தையா வழங்கினார். நிகழ்ச்சியில் சுழற் சங்கத்தின் முன்னாள் துணை ஆளுநர் கே.லட்சுமி நாராயணன், செயலாளர் சண்முகநாதன், கல்லூரி பேராசிரியர் எம்.மாரியப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கே.வினோத்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




