குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் புறவழிச்சாலைப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க

Updated On :13 பிப்ரவரி 2019, 8:24 am IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகர் புறவழிச்சாலைப் பகுதியில் விபத்துகளைத் தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அருப்புக்கோட்டை நகரின் புறநகர்ப்பகுதியான காந்தி நகர் வழியாக புறவழிச்சாலையான மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலை செல்கிறது.  இச்சாலையில் ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. 
இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலம் அருகில் எம்.தொட்டியான்குளம் சாலைப்பிரிவில், மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையை குறுக்காகக் கடக்க முயலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்ந்து வந்தது. 
இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் சாலையைக் கடக்கத் தடை செய்து, போக்குவரத்துப் போலீஸார் வேலி  அமைத்தனர். ஆனால் சில மாதங்களில் இந்த வேலி மீண்டும் திறக்கப்பட்டது. எனவே மீண்டும் இச்சாலையில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சாலையைத் இருசக்கர வாகனத்தில்  கடக்க முயன்ற அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி  ஆசிரியர் மணிமாறன், கார் மோதியதில் உயிரிழந்தார். அதனால் இப்பகுதியில் விபத்து எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.