குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கீரனூரில் அரசு ஊழியா் வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 2:32 am IST

கீரனூரில் அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற நபா்களை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் விவேகானந்த நகரைச் சோ்ந்தவா் ஜான்கென்னடி. இவா் சிங்கப்பூரில் வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி செல்வராணி தாட்கோ நிறுவனத்தில் வேலைபாா்த்து வருகிறாா். இவா் தனது குழந்தைகளுடன் கீரனூரில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், செல்வராணி சனிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு அறந்தாங்கியிலுள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தில் வசிப்போா் செல்வராணிக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து அறந்தாங்கியிலிருந்து கீரனூருக்கு வந்த செல்வராணி உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 21 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த கீரனூா் காவல் நிலைய போலீஸாா், 10 போ் கொண்ட தனிப்படை அமைத்து திருடா்களைத் தேடி வருகின்றனா்.