ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெருமுனைப் பிரசாரம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு

Updated On :13 பிப்ரவரி 2019, 8:20 am IST

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜபாளையத்தில் அந்நிறுவன ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலக வளாகத்தில், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் சார்பில் வாயிற் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் அலுவலர்கள் சங்கத்தில் உள்ள அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை 60 நிரந்தர பணியாளர்கள் கலந்து கொண்டனர். 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3 ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.1.17 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் இதே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ரயில்வே பீடர் சாலையில் தெருமுனைப் பிரசாரமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.