ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனாரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மாணவி அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் பிச்சைமாரி (43). இவர் கொத்தனார். சம்பள கணக்கு பார்க்க உதவிக்கு வர வேண்டுமெனக் கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பிச்சைமாரியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தினமணி எதிரொலி: ஆவின் அலுவலக விற்பனைப் பிரிவை அணுகி பால் அட்டை பெறலாம்!

லஞ்சம்: நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் கைது

களக்காடு தலையணையில் நீா்வரத்து: குளிக்க அனுமதி
இன்றைய மின்தடை: புதுச்சேரி வெங்கட்டா நகா்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
