நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் படைப்பரங்கம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சார்பிலான மாதாந்திர எழுத்தாளர் மற்றும் 

Updated On :25 பிப்ரவரி 2019, 7:28 am IST

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சார்பிலான மாதாந்திர எழுத்தாளர் மற்றும் படைப்பரங்கத்தின் 216 ஆவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எம்.என்.ஆர்.டி. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். இதில், திருப்பூர் எழுத்தாளர் செல்லம் ரகுவின் "விடியலின் முகவரிகள்' என்ற ஹைக் கூ நூல் மற்றும் "நினைக்க முளைக்கும் சிறகுகள்', "இனிதிலும் இனிது காதல்', "அன்பென்று கொட்டு முரசே' ஆகிய கவிதை நூல்கள் குறித்து புலவர் ப. வெள்ளை, கவிஞர் கந்தகப் பூக்கள் பூபதி, கவிஞர் சி. அன்னக்கொடி, பேராசிரியர் சு. திருநாவுக்கரசர், பெ. திருப்பதி ஆகியோர் விமர்சனம் செய்தனர்.
பின்னர், எழுத்தாளரை கெளரவித்து பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சமூகநல ஆர்வலர் நூர்சாகிபுரம் க. துள்ளுக்குட்டி, கவிஞர் ஆல. தமிழ்ப்பித்தன், கவிஞர் சந்திரசேகர், கவிஞர் க. அங்குராஜ், எழுத்தாளர் அபூர்வன் ராஜா, கிராமியக் கலைஞர் சு. ராமசாமி, மிருதங்க கலைஞர் சின்னமுத்து, இரா. தங்கமாரி, மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, செயலர் சி. முத்துக்குமார் வரவேற்றார். நிறைவாக, எழுத்தாளர் 
செல்லம் ரகு ஏற்புரையாற்றினார். ப. அடைக்கலம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.