எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ஸ்ரீவில்லிப்புத்தூரில் 52 மது பாட்டில்கள் கடத்தல்: மின்வாரிய ஊழியர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் 52 மது பாட்டில்களைக் கடத்திய மின்வாரிய ஊழியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :26 பிப்ரவரி 2019, 2:12 am IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் 52 மது பாட்டில்களைக் கடத்திய மின்வாரிய ஊழியரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திகுளத்தைச் சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (39). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மின்வாரியத்தில் கணக்கீட்டாளராக வேலை செய்து வருகிறார். 
இந்நிலையில் இவர் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் 52 மது பாட்டில்களை கடத்திச் சென்றதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
இந்த தகவலின் பேரில் நகர் காவல் சார்பு -ஆய்வாளர் முத்துக்குமரன், அத்திகுளம் ரயில்வே கடவுப்பாதை அருகே மதுபாட்டில்களுடன் சென்று கொண்டிருந்த செண்பகமூர்த்தியைக் கைது செய்தார்.
மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.