ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

கோயில் பட்டர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பணிபுரியும் பட்டாச்சாரியர்கள் மற்றும்

Updated On :23 ஜனவரி 2019, 7:45 am IST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பணிபுரியும் பட்டாச்சாரியர்கள் மற்றும் பரிசாரர்களுக்கு 41 நாள்கள் புத்தொளி பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை தொடங்கியது. 
 இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளர் பாண்டியன் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தார். 
  ரா.பாலாஜி பட்டர், வேதபிரான்பட்டர் அனந்தராமகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
  பயிற்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் உள்ள கோயிலிகளைச் சேர்ந்த பட்டாச்சாரியர்கள் மற்றும் பரிசாரர்கள் கலந்து கொண்டுள்ளனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தக்கார் தி.ரவிச்சந்திரன் செய்துள்ளார். செயல் அலுவலர் அ.இளங்கோவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.